Saturday, December 25, 2010

வாழ்க வையகம்

அன்றொரு நாள் அக்கம் பக்கத்து
மாமாக்கள் சமைத்துத் தந்த
அந்த கோவில் பொங்கலை
வரிசையில் அமர்ந்து
உண்ட காலத்தில்
அறிந்திருக்கவில்லை
வாழ்க்கையின் ரகசியத்தை

எனக்குத் தெரிந்ததெல்லாம்
நல்ல நல்ல மாமாக்கள்
என் விளையாட்டுத் தோழர்களின்
தந்தை மார்கள்

கோவிலில் விஷேசம் என்றால்
குழந்தைகளாகிய நாங்கள்
மட்டும் தவறாது சென்று
பூஜையில் கலந்து
பொங்கல் சாப்பிடுவோம்

மாட்டுப் பொங்கல் என்றால், அவியலும்
வெண்பொங்கலும் அளிப்பார்கள்
கோவிலில்

குழந்தையாய் உண்ட பொங்கலின்
மணமும் சுவையும் இன்னும்
மனதை விட்டு மறைய வில்லை

ஒன்றாய்க் கூடும் மக்கள் சந்திப்பில்
தெய்வ அருள் மௌனமாய் ஒளிரும்
கோவிலானாலும் சந்தையானாலும்
அன்றானாலும் இன்றானாலும்

நம் மனதை தக்கபடி வைத்துக்
கொண்டோமானால் இந்த அவசர
உலகில் கூட இந்த உண்மையைக்
காண முடியும்

வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன்

1 comment:

Philosophy Prabhakaran said...

ம்ம்ம்.... வாழட்டும் மேடம்... வாழ்த்துக்கள்...