Thursday, August 20, 2015

இராமர்


இராமரை பார்க்க எண்ணினேன்
ஆயிரம் ஆயிரம் இராமரை பார்த்த பின்
தினம் பெண்ணிலுமாய் ஆணிலுமாய்
சேயிலுமாய் காட்சி அருளுகிறார் இராமர்

பதி இழந்த பசு

பதி இழந்த பசு
பதி இழந்த பசு
கன்று பாலருந்தும்
நேரம் பதி பசுவை 
அனுபவிக்கிறது
என்றிருக்க
கன்றை பிரித்து
பால் கறக்கும்
வித்தையை
ஏன் கற்றாரோ
கற்றவர் என்று
சொல்லிக்
கொள்ளும்
சில மானிடர்