Sunday, June 30, 2013

ஐய்யப்பன் கீதம்

பாலம் அமைத்திட்டேன்
ஏழு கடல் மேல்
இறைவனை கைபிடிக்க

பிடித்த மறு கணம்
பறந்தது
பாவம் பொடிபட்டு

பதினெட்டுப் படி ஏறி
ஐயப்பன் கைபிடிக்க
ஏங்கினேன்

ஐயப்பன் கருணை
எனக்கென்று தனி
பதினெட்டுப் படி

எனக்குள் ஐய்யப்பன்
என்றெண்டும்
இருந்திட்டபோதும்

உயிரை கல்லாக்கி
கல்லை உயிராக்கி
காணும் வல்லவன்

தானென்று இன்றுதான்
உரைத்திட்டான். அவனாகி
நானும் கல்லை கனியாக்கப்
புறப்பட்டேன்

வாழும் ஐய்யப்பன் கீதம்
வளரும் ஐய்யப்பன் லீலை
வாழ்க வையகம்