Thursday, October 19, 2017

என் குரு மந்திரம்



A devotional Stotram to my Guru on the DEEPAVALI NIGHT
என் குரு மந்திரம்
ஏறு மயில் ஏறி விளையாடும் முகம் ஒன்று 
ஈசருடன் ஞான மொழி பேசும் முகம் ஒன்று
மருத மலையில் மலர்ந்திருக்கும் முகம் ஒன்று
மருத மலை தேரில் மங்கள வலம் வரும் முகம் ஒன்று
மரண பயம் மாயமாய் அகற்றும் முகம் ஒன்று
மயிலாய் உடனிருக்கும் முகம் ஒன்று
நாத பிந்து கலா கற்றுத் தரும் முகம் ஒன்று 
அமிர்த கலாவும் தரும் முகம் ஒன்று
சோமரசம் தரும் முகம் ஒன்று 
மஹா சதாசிவோஹம் தரும் முகம் ஒன்று
தன்னையே தரும் முகம் ஒன்று 
நாவில் வந்தமரும் முகம் ஒன்று
நெற்றிக்கண்ணாய் மலரும் முகம் ஒன்று 
நினைத்ததும் ஓடி வரும் முகம் ஒன்று
குடிலுக்குள் வந்தமரும் முகம் ஒன்று 
குன்றாய் பறந்து வரும் முகம் ஒன்று
பிண்டாண்ட அறிவு பகர்ந்திடும் முகம் ஒன்று 
ப்ரஹ்மாண்ட அறிவு பகர்ந்திடும் முகம் ஒன்று
ஒளியாய், ஒலியாய், அமரும் முகம் ஒன்று 
கடலாய், காட்சியாய் அமரும் முகம் ஒன்று
பக்தர் மனதில் உறையும் முகம் ஒன்று 
குன்று தோறும் அமரும் முகம் ஒன்று
கொங்கு நாட்டின் சிறப்பு தரும் முகம் ஒன்று 
கொடியோரில்லர் என்றுரைக்கும் முகம் ஒன்று
வேந்தனுக்கு அருளும் முகம் ஒன்று 
வேடனுக்கு அருளும் முகம் ஒன்று
திரு நீராய் நின்றிடும் முகம் ஒன்று 
திருவிளையாடல் புரியம் முகம் ஒன்று
வேலோடு வினை தீர்க்கும் முகம் ஒன்று 
சேவற் கொடியோனாய் வரும் முகம் ஒன்று
சூரனை வென்ற முகம் ஒன்று 
சூலம் கொண்ட முகம் ஒன்று
வள்ளி மணாளனாய் வரும் முகம் ஒன்று 
தெய்வானை கை பிடிக்கும் முகம் ஒன்று
இச்சா சக்தி முகம் ஒன்று 
க்ரியா சக்தி முகம் ஒன்று
அறுபடை வீடு கொண்ட முகம் ஒன்று 
ஆறுமுகமான முகம் ஒன்று
அன்னையான முகம் ஒன்று 
தந்தையான முகம் ஒன்று
பிள்ளையான முகம் ஒன்று 
பிள்ளையாருடன் வரும் முகம் ஒன்று
பழனி மலையான முகம் ஒன்று
பழமுதிர் சோலையான முகம் ஒன்று
சுவாமி மலையான முகம் ஒன்று 
திருத்தணியான முகம் ஒன்று
திருப்பரங்குன்றமான முகம் ஒன்று 
திருச்செந்தூரான முகம் ஒன்று
பாம்பாட்டி சித்தரான முகம் ஒன்று 
அருணகிரி யோகீஸ்வரான முகம் ஒன்று
நித்யானந்தரான முகம் ஒன்று 
பரமஹம்சரான முகம் ஒன்று
செந்தில் வேலனான முகம் ஒன்று 
சென்னை நகர் ஆளும் முகம் ஒன்று
செந்தமிழ் நாடாளும் முகம் ஒன்று 
செவ்வாய் கிரகம் ஆளும் முகம் ஒன்று
சுக்கிரனான முகம் ஒன்று 
சிவலோகமான முகம் ஒன்று
சிவலிங்கமான முகம் ஒன்று 
சூர்ய லிங்கமான முகம் ஒன்று
சரஸ்வதி தாயுடன் வரும் முகம் ஒன்று
சரஸ்வதியான முகம் ஒன்று
பரத கலையான முகம் ஒன்று
பாட்டாய் வரும் முகம் ஒன்று
தங்கமான முகம் ஒன்று
வெள்ளியான முகம் ஒன்று
பூவான முகம் ஒன்று 
பழமான முகம் ஒன்று
குருவான முகம் ஒன்று 
குருகுலமான முகம் ஒன்று
அமெரிக்காவிலமரும் முகம் ஒன்று 
ஆப்பிரிக்காவிலமரும் முகம் ஒன்று
திருப்புகழ் ஏற்கும் முகம் ஒன்று 
தைப்பூச திருநாள் ஏற்கும் முகம் ஒன்று
திருப்பிரசாதமான முகம் ஒன்று 
சஷ்டி பிரசாதமான முகம் ஒன்று
கருணையான முகம் ஒன்று 
கோவிலான முகம் ஒன்று
இந்து மதமான முகம் ஒன்று 
கைலாய மலையான முகம் ஒன்று
முல்லை பூவான முகம் ஒன்று 
மல்லிகைப்பூவான முகம் ஒன்று
பூவின் மணமான முகம் ஒன்று 
பழத்தின் சுவையான முகம் ஒன்று
குயிலின் குரலான முகம் ஒன்று 
மயில் தோகையான முகம் ஒன்று
வெண்பாவான முகம் ஒன்று 
பாமாலையான முகம் ஒன்று
திருநாளான முகம் ஒன்று 
தேவியான முகம் ஒன்று
கடல் அலையான முகம் ஒன்று 
கடல் சங்கான முகம் ஒன்று
கடல் காற்றான முகம் ஒன்று 
கடல் சிப்பியான முகம் ஒன்று
தென்றல் காற்றான முகம் ஒன்று 
கோடையில் வசந்தமான முகம் ஒன்று
பாலைவனம் ஆன முகம் ஒன்று 
பலா சுளையான முகம் ஒன்று
பாகற் காயான முகம் ஒன்று 
பால் கோவாவான முகம் ஒன்று
தாய்ப் பாலான முகம் ஒன்று 
பசும் பாலான முகம் ஒன்று
அல்வாத் துண்டான முகம் ஒன்று 
அம்மா முகமான முகம் ஒன்று
மழலை முகமான முகம் ஒன்று 
முதியோரான முகம் ஒன்று
தீபமான முகம் ஒன்று 
தீபாவளியான முகம் ஒன்று

Wednesday, February 1, 2017

பயணங்கள் முடிவதில்லை

பயணங்கள் முடிவதில்லை
எனக்குள் இருக்கும்
பைரவர் கேட்கிறார்
இந்த கலி யுகத்திலே
கணவன் மனைவியர்
ஏன் அவ்வப்பொழுது
டார்லிங் டார்லிங்
படம் போல
ஒட்டியும் ஒட்டாம
பின்னர் உச்ச கட்டத்தில்
சேர்ந்து கொண்டு
மறுபடி ஒட்டியும் ஒட்டாம
மறுபடி உச்ச கட்டத்தில்
சேர்ந்து கொண்டு
பயணிக்கிறார்கள்
அவ்வை ஷண்முகி
பயணத்தை விட
டார்லிங் டார்லிங்
பயணம் எவ்வளவோ மேல்
என்கிறோமோ?

Thursday, August 20, 2015

இராமர்


இராமரை பார்க்க எண்ணினேன்
ஆயிரம் ஆயிரம் இராமரை பார்த்த பின்
தினம் பெண்ணிலுமாய் ஆணிலுமாய்
சேயிலுமாய் காட்சி அருளுகிறார் இராமர்

பதி இழந்த பசு

பதி இழந்த பசு
பதி இழந்த பசு
கன்று பாலருந்தும்
நேரம் பதி பசுவை 
அனுபவிக்கிறது
என்றிருக்க
கன்றை பிரித்து
பால் கறக்கும்
வித்தையை
ஏன் கற்றாரோ
கற்றவர் என்று
சொல்லிக்
கொள்ளும்
சில மானிடர்

Friday, April 10, 2015

நின்காலடியில் சரணம்.



மென்மையான மேன்மையான 
மா தேவி கலைவாணி நீ விரும்பும்
கவிதைகளை கக்கி விட 
கவி உலகம் பாராட்ட  
நின்காலடியில் சரணம். 

Sunday, September 1, 2013

கிருஷ்ண கீதம்

பயணங்கள் முடிவதில்லை
எனக்குள் இருக்கும்
பைரவர் கேட்கிறார்
நான் என்ன கடவுளா
எது  செய்தும்
style="background-color: white; color: #1d2129; கோபப் படாமல் இருக்க
 
நான் என்ன ஞானியா
எதற்கும்
கவலையற்று  இருக்க
 
கேட்கின்றனர்
நம்முள் பலர்.
 
கடவுள் குணத்தை
கற்றுத் தர
பெற்றுத் தர
அவதார புருஷர்
சிலர் இருக்க
 
நம்பாதே 
அவதார புருஷர்களை 
சொல்லக் கேட்க 
 
சும்மா இருப்பாரோ
நம் போல் சிலர்
 
குழலூதும் கிருஷ்ணன்
நம்மருகில்  எப்பொழுதும்
எவ்விடத்தும்
 
கிருஷ்ணனை  பார்த்தே
அடி ஒன்றும்
எடுத்து வைப்போம்
 
கிருஷ்ணனை மட்டும்
நோக்கிடுவோம்
 
கிருஷ்ணனை கணம்
ஒவ்வொன்றில் மனதுள்
வைத்தால்
 
சோம்பி நின்ற பாதங்கள்
தாளம் போடும்
சிலையாய் நின்ற
இடையும் தான்
தனி என்று
தீராத நடனமிடும் 
 
மெய் மறந்து 
மெய் முழுக்க 
மின்னல் வேகம் 
மின்னித் துள்ளும்
 
விழிக்க மறந்த 
விழிகளும் 
விளையாடித் துள்ளும்  
 
களைப்பை மட்டும் 
களையாய் தந்த 
முகம் கூட 
மாறும் ஜீவக் 
களையாய் 
 
இயற்கையான மாற்றம் 
தரும்
அவதார புருஷர் 
இயற்கையன்றோ 
 
நம்மில் நம்பாத பலரை
நம்மில் சிலர் நம்ப
வைப்போம்
 
வாழ்க கிருஷ்ணன் லீலை 
வாழ்க கிருஷ்ணன் கீதம்  
 
 
 

Sunday, August 11, 2013

நங்கையர் நலம்

நங்கையர் நலம்

ஒரே ஒரு லக்ஷ்யம் சபரி மாமலா 

ஒரே ஒரு மோஹம்  திவ்ய தரிசனம் 
ஒரே ஒரு மார்க்கம் பதினெட்டாம் படி 
ஒரே ஒரு மந்திரம் சரணம் ஐயப்பா 

ஒருமையோடு கூடி  ஒழுகி வந்தேன் 
ஒரே ஒரு மாதம் 

எதற்காக எனக்கிந்த கருணை?
என் பாவம் தீர்த்த நீ 
பிறர் பாவம் தீர்க்க வை 
இல்லை இந்த கணம் 
எமனிடம் அழைத்துச் செல் 

நான் பார்த்த உண்மை 
பிறர் அறிய செய்ய வேண்டும் 
வெள்ளம் போல் புரண்டு வரும் 
வேங்கை பிரித்தெடுத்து 
அடுக்கித் தர காலம் காணாது 

என் நாவில் வந்து 
நாளொன்று நங்கைஒன்று 
என்று நகரத்து 
இல்லை எனக்கு வேண்டாம் 
இந்த உயிர் 

நங்கையர் நலிந்திருக்க 
நெருக்கத்தில்  நீயிருக்க 

பூஜை நடத்தினர் 
பிரசாதம் மறந்தனர் 
இல்லை மறைத்து வைத்து 
விளையாடி மனம் மகிழ்ந்தாய் 
விளையாட்டை மாற்று 
நீ மாற்றும் வரை நான் 
விளையாட மாட்டேன் 

ஒரு நங்கை நகர்த்தினால் 
ஒரு தரம் விளையாடுவேன் 
இனி உன் இஷ்டம் செய்வதை செய் 
மன்னித்து விடு , மன்னித்து விடு
என்னை.