Sunday, December 30, 2012

அனுபவம் தரும் சுகம்

அனுபவம் அதனை
வடிவமைத்து
தெளிவுபடுத்தி
புதுமை சேர்த்து
பலருக்கு
பலவிதம்
புகட்டி வந்தால்
அதுவும்
புது வித
அனுபவம்
ஆகுமே

அனுபவமிக்க
மனங்கள்
இளைய
மனங்களுக்கு
நல்ல
தூணாய்
அமையும்
காலம்
வசந்த காலம்

சூத்திரம்
தேவையானவர்க்கு
சுறுசுறுப்பாய்
அள்ளிக்
கொடு

வாழ்வு
என்றும்
சுகம்
ஆகுமே