புன்னகைக்குள்
காரணம் புதைந்திருக்கும்
புன்னகித்து புன்னகித்து
பரவசம் பகிர்ந்து பகிர்ந்து
புன்னகையின் பிற்பயனாய்
பெரும் புத்துணர்ச்சி
பெருக்கி பெருக்கி
புன்னகை படர்ந்த முகமாய்
பாசத்தை பொழிந்த முகமாய்
பலர் முன் திரிந்து திரிந்து
பலரை நெஞ்சுக்குள் ஈர்த்து ஈர்த்து
பலருக்காக பல நாட்கள்
வாழ்ந்து வாழ்ந்து
வாழ்க்கை வாழ்வது தனக்காக அல்ல
பலருக்காக என அறிந்து அறிந்து
நாட்களைத் தள்ளும் மானிடன்
அவனல்லவா உயர்ந்தவன்?
Sunday, August 14, 2011
Subscribe to:
Posts (Atom)