Friday, July 27, 2012

தாயன்பு

தாயன்பை பெற்றுப்பார் பிறரிடத்து
எத்தனை பலம்  பின் தெரியும் 

புகழ், பணம் சரிந்த பொழுது
தலை தூக்கி விடும் தாயன்பு

மனம் நொந்த பொழுது
அள்ளித் தரும்  நிம்மதி தாயன்பு

தாயாய் சேயுடன் தவிக்கும் பொழுது
தவிப்படங்கும்  தாயன்பு கண்டு

தாயன்பு காண தேவை இல்லை
தாய் அருகில்

தாயன்பைத் தர வல்லோர் 
அன்பு காட்டும் ஒவ்வொருவரும்

Sunday, July 15, 2012

வளமான வாழ்க்கை

ஏன் ஏன் கேட்ட உயிர்
எப்படி எப்படி என எண்ணிப்
பழகும் காலம் வினை
நீங்கும் காலம்

ஏன் என்று உடையாது 
எப்படி திருத்த  விடை
அறிந்து

சவால்  சந்திக்கும்
திறன் கொடு 
இறைவனை வேண்டி

இறைவழி என்வழி
என்வழி இறைவழி
என உணர்ந்து

பிறர் மகிழ்ச்சி
தன் மகிழ்ச்சி
அனுபவத்தில் அறிந்து

வாழும் வாழ்க்கை
வளமான வாழ்க்கை