சோர்வுற்ற நெஞ்சம்
அவனிடம் தஞ்சம்
அவனுள் கலந்த நெஞ்சம்
பிறரை மிஞ்சும்
அவனை அறியா நெஞ்சம்
துயரில் துஞ்சும்
அவன் காலடியில் தஞ்சம்
விருத்திக்கு இல்லை பஞ்சம்
அவனைப் புகழ்ந்த நெஞ்சம்
சான்றோரை மிஞ்சும்
தஞ்சம் அடைந்தோனை
தூக்கி விடும்
அவன் நெஞ்சம்
இறைவன் நெஞ்சம்