Saturday, March 9, 2013

இறைவன்


சோர்வுற்ற நெஞ்சம்
அவனிடம் தஞ்சம்

அவனுள் கலந்த நெஞ்சம்
பிறரை மிஞ்சும்

அவனை அறியா நெஞ்சம்
துயரில் துஞ்சும்

அவன் காலடியில் தஞ்சம்
விருத்திக்கு இல்லை பஞ்சம்

அவனைப் புகழ்ந்த நெஞ்சம்
சான்றோரை மிஞ்சும்

தஞ்சம் அடைந்தோனை
தூக்கி விடும்
அவன் நெஞ்சம்
இறைவன் நெஞ்சம்