Friday, August 20, 2010

இளமை

இளமைக்கு ஒரு ராகம் அது
சாகும் வரை பாடும்

இளமைக்கு ஒரு சுகம் அது
என்றும் சுடும்

இளமைக்கு ஒரு வேகம் அது
என்று தணியும் ?

இளமைக்கு ஒரு விருந்து அது
இருளிலே தொடங்கும் .

இளமைக்கு ஒரு சக்தி
அது உள்ளம் கவரும்

இளமை, இளமை, இளமை
என்று ரீங்காரம் இட்டே
செல்லும்

Tuesday, August 10, 2010

இப்படியும் ஒரு பெண்

கண் பேச மறந்த நங்கை
மறந்த கண்ணை நினைவில் கொண்டு
ஆனந்தக் கூத்தாடினாள்

பெண்ணழகு

பெண்ணுக்கு அறிவு தான் அழகு
அழகைப் பார்ப்பதில்லை நான்
என்று சொன்ன இளைஞன்
வாயடைத்துப் போனானாம் அந்த
சுந்தர இரவில் !

இளமை

கண்ணிலே தொடங்கி, புன்னகையில்
மலர்ந்து, நெஞ்சினிலே கலந்து
தங்கி விடைபெற்றுத் தொடரும்
பரிமாற்றம் இளமைக்கு மட்டுமா
சொந்தம்?

ஒற்றுமை

பறவைக்கும் பெண்ணிற்கும்
பறந்து பறந்து குஞ்சிற்கு இறை கொடுப்பதில்

பூவிற்கும் பெண்ணிற்கும்
மணம் பரப்பும் மும்மரத்தில்

நிலாவிற்கும் பெண்ணிற்கும்
குளிர்ந்து, குளிரவைத்து குடும்பத்தைக் காப்பதில்

தாமரைக்கும் பெண்ணிற்கும்
மயங்க வைக்கும் செவ்விதழ்களில்

Sunday, August 8, 2010

தோழன்

பத்து வார்த்தை பேசினாலே உன்னுள் பத்தாயிரம் சிறந்த
வார்த்தை புதைந்திருக்குது என்றான்

பெண்ணே நீ பிறந்தது எதற்கு என்று
சிந்திக்கவும் வைத்தான்

பதுங்கிக் கிடந்த உயிரைப் பலர் முன்னிலையில்
வெளியிட்டு மகிழ்ந்திட அடித்தளம் வைத்தான்

உன் கையிருக்கு இங்கே இணையம் இருக்குது அங்கே
இரண்டையும் இப்போதே கோர்த்துவிடு என்றான்

முடங்கிக் கிடந்த ஆசையை மும்மரமாய்
வளர்த்துப் பெருக்கிட தூண்டு கோலானான்

ஆசைக்கும் அறிவிற்கும் உள்ள இடைவெளியை
தூரதிருஷ்டிக் கண்ணாடியில் காண்பித்தான்

பெண்ணே அறிவை ஆசைக்குத் தடையாக்கினால்
அந்த அறிவைத் தூக்கி எறியத் தயங்காதே என்றான்