Sunday, August 8, 2010

தோழன்

பத்து வார்த்தை பேசினாலே உன்னுள் பத்தாயிரம் சிறந்த
வார்த்தை புதைந்திருக்குது என்றான்

பெண்ணே நீ பிறந்தது எதற்கு என்று
சிந்திக்கவும் வைத்தான்

பதுங்கிக் கிடந்த உயிரைப் பலர் முன்னிலையில்
வெளியிட்டு மகிழ்ந்திட அடித்தளம் வைத்தான்

உன் கையிருக்கு இங்கே இணையம் இருக்குது அங்கே
இரண்டையும் இப்போதே கோர்த்துவிடு என்றான்

முடங்கிக் கிடந்த ஆசையை மும்மரமாய்
வளர்த்துப் பெருக்கிட தூண்டு கோலானான்

ஆசைக்கும் அறிவிற்கும் உள்ள இடைவெளியை
தூரதிருஷ்டிக் கண்ணாடியில் காண்பித்தான்

பெண்ணே அறிவை ஆசைக்குத் தடையாக்கினால்
அந்த அறிவைத் தூக்கி எறியத் தயங்காதே என்றான்

No comments: