அவன் பார்வையில் ஓராயிரம்
கவிதைகள் எழுதினேன் காற்றில் நானே
அவன் உருவத்தில் ஓராயிரம் முறை
துள்ளினேன் நானே
அவன் உள்ளத்தில் ஓராயிரம் முறை
குடி புகுந்தேன் நானே
அவன் அன்பில் சர்க்கரையாய்
கரைந்தேன் நானே
அவனைச் சார்ந்து சார்ந்து வாழும் கணமெல்லாம்
பொன் என்று உரைத்தேன் நானே
Saturday, June 18, 2011
அன்பே வெல்லும்
அறிவு சார்ந்த பெண்ணே
அகிலமும் அறிவைச் சார்ந்து இராது
அறிவால் உன்னை ஆளாதே
அன்பால் உன்னை ஆக்கிரமி
ஏன் எதற்கு கேள்வி எல்லாம்
வெறும் பாட சாலைக்கு மட்டும்
ஏன் என்ற கேள்விக்கு இடமில்லை
மனித உறவுகளில்
பாட சாலையில் உறவுகள் பாடம்
இல்லாமல் போனது
இன்று அகிலத்தையும்
ஆட்டி வைக்கிறது
பெண் படிக்காமல் இருப்பது நல்லதன்று
படித்தும் உறவுகள் பற்றி அறியாமல்
இருப்பது அதனினும் நல்லதன்று
அகிலமும் அறிவைச் சார்ந்து இராது
அறிவால் உன்னை ஆளாதே
அன்பால் உன்னை ஆக்கிரமி
ஏன் எதற்கு கேள்வி எல்லாம்
வெறும் பாட சாலைக்கு மட்டும்
ஏன் என்ற கேள்விக்கு இடமில்லை
மனித உறவுகளில்
பாட சாலையில் உறவுகள் பாடம்
இல்லாமல் போனது
இன்று அகிலத்தையும்
ஆட்டி வைக்கிறது
பெண் படிக்காமல் இருப்பது நல்லதன்று
படித்தும் உறவுகள் பற்றி அறியாமல்
இருப்பது அதனினும் நல்லதன்று
Subscribe to:
Posts (Atom)