வாழ்க்கைப் போராட்டங்கள் கண்டு
மிரளும் போது மனம் கனமாகிறது
தனிமையாகப் போராடிக் கொண்டிருக்கும் வேளை
மனம் கனத்திருக்கும் வேளை
போராட்டங்கள் மட்டுமே அனுபவித்த
மனம் விடுபட்டு சிரிக்கின்றது
உலகின் எல்லா இதயங்களுடன்
மனம் இணைந்து விடுகிறது
மௌன மொழியிலும்
மனம் சிறப்பைக் காணுகிறது
போராட்டங்கள் கண்ட மனம்
மௌனிக்கிறது தான்
போராடும் நண்பர்களே,
நீங்கள் மௌனித்து சாந்தம் அடைய
என் வாழ்த்து மடல் இக்கவிதை
Saturday, April 23, 2011
Subscribe to:
Posts (Atom)