Saturday, April 23, 2011

போராட்டங்கள்

வாழ்க்கைப் போராட்டங்கள் கண்டு
மிரளும் போது மனம் கனமாகிறது

தனிமையாகப் போராடிக் கொண்டிருக்கும் வேளை
மனம் கனத்திருக்கும் வேளை

போராட்டங்கள் மட்டுமே அனுபவித்த
மனம் விடுபட்டு சிரிக்கின்றது

உலகின் எல்லா இதயங்களுடன்
மனம் இணைந்து விடுகிறது

மௌன மொழியிலும்
மனம் சிறப்பைக் காணுகிறது

போராட்டங்கள் கண்ட மனம்
மௌனிக்கிறது தான்

போராடும் நண்பர்களே,
நீங்கள் மௌனித்து சாந்தம் அடைய
என் வாழ்த்து மடல் இக்கவிதை

1 comment:

ம.தி.சுதா said...

அழுத்தமான வரிகள்...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
அளவுக்கதிகமான பரசிட்டமோல் என்ன செய்யும்.. (Paracetamol Poisoning)