Sunday, April 11, 2010

எந்தன் மனம்

எந்தன் மனமும் ஒரு அற்புதமே

தாய் தந்தையரை என்றும் விசுவாசமாய் நாடிய மனம்
விடலைப் பருவத்தில் சற்று முரண்டும் பிடித்தது

வளர்ந்த பின்னும் தாய் தந்தையர் சொல்லை
மந்திரமாய் ஏற்றுக் கொண்டது

எந்தன் மனமும் ஒரு அற்புதமே

மற்றவருக்கு வேறுபட்டுத் தோன்றினாலும்
மற்றவரின் நன்மதிப்பையே பெற்றது

பிறருக்கு உதவி செய்யத் துடித்த மனம்
பேரமைதியுடன் உதவி செய்து கொண்டே வந்தது

எந்தன் மனமும் ஒரு அற்புதமே

சிலப் பத்தாண்டுகள் ஓடிய போதும்
குழந்தை மனமாகவேத் தங்கியது

வயது முதிர்ந்த ஆடவரையும்
பால்ய வயதுத் தோழனைப்போல் பார்க்கிறது

எந்தன் மனமும் ஒரு அற்புதமே

கோவில் சிலைக்கு முன்னால் உருகிய மனம்
தன்னை அறிந்து கொள்ளத் தவறியது

முன்னமேத் தன்னை அறியத் தவறினாலும்
அறிந்த பின் பேர் ஆறுதல் அடைந்தது

எந்தன் மனமும் ஒரு அற்புதமே