ஊரெல்லாம் குறையோடு நபர்கள் இருக்க
நீ மட்டும் பூரணமாய் வாழ்வதெதற்கு?
பூரணமாய் வாழ்வதே குறை யாயிற்றே
பூரணமாய் வாழத் துடிக்கும் போது
மற்றவரை துடிக்கச் செய்யாதவர் யாரோ?
பூரணமாய் வாழத் துடிக்கும் போது
தன்னைத் தானே துன்புறுத்துவதும் ஏனோ?
பூரணமான வாழ்க்கையும் பூரணம் அல்லவே
குறையும் குறை அல்லவே
பூரண சந்தோசம் என்று ஒன்று இல்லையே
பூரண பக்தி என்று ஒன்று இல்லையே
பூரண அன்பு என்றும் கூட ஒன்றும் இல்லையே
பூரண வாழ்க்கை மட்டும் எங்கிருந்து வர முடியும்?
Monday, February 7, 2011
Subscribe to:
Posts (Atom)