Friday, July 27, 2012

தாயன்பு

தாயன்பை பெற்றுப்பார் பிறரிடத்து
எத்தனை பலம்  பின் தெரியும் 

புகழ், பணம் சரிந்த பொழுது
தலை தூக்கி விடும் தாயன்பு

மனம் நொந்த பொழுது
அள்ளித் தரும்  நிம்மதி தாயன்பு

தாயாய் சேயுடன் தவிக்கும் பொழுது
தவிப்படங்கும்  தாயன்பு கண்டு

தாயன்பு காண தேவை இல்லை
தாய் அருகில்

தாயன்பைத் தர வல்லோர் 
அன்பு காட்டும் ஒவ்வொருவரும்

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

தாயன்பின் அருமையை போற்றும் நல்ல கவிதை.

/// தாயன்பு காண தேவை இல்லை
தாய் அருகில்
தாயன்பைத் தர வல்லோர்
அன்பு காட்டும் ஒவ்வொருவரும் ///

அருமையாக முடித்துள்ளது சிறப்பு...

உங்கள் தளத்திற்கு முதல் வருகை !
Follower ஆகி விட்டேன்.
தொடர வாழ்த்துக்கள். நன்றி.

Yaathoramani.blogspot.com said...

பிரதி பலன் எதிர்பாராத அன்பு
உலகில் தாயன்பு ஒன்றுதானே
மனம் கவர்ந்த அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்