Sunday, August 14, 2011

புன்னகை

புன்னகைக்குள்
காரணம் புதைந்திருக்கும்

புன்னகித்து புன்னகித்து
பரவசம் பகிர்ந்து பகிர்ந்து

புன்னகையின் பிற்பயனாய்
பெரும் புத்துணர்ச்சி
பெருக்கி பெருக்கி

புன்னகை படர்ந்த முகமாய்
பாசத்தை பொழிந்த முகமாய்

பலர் முன் திரிந்து திரிந்து
பலரை நெஞ்சுக்குள் ஈர்த்து ஈர்த்து

பலருக்காக பல நாட்கள்
வாழ்ந்து வாழ்ந்து

வாழ்க்கை வாழ்வது தனக்காக அல்ல
பலருக்காக என அறிந்து அறிந்து

நாட்களைத் தள்ளும் மானிடன்
அவனல்லவா உயர்ந்தவன்?

3 comments:

சத்ரியன் said...

கவிதை அழகு.

இந்தக் காலத்துல யாருங்க பிறருக்காக வாழ விழையறாங்க? சுயநலமே பெருகிக் கிடக்குது இங்கே.

Prem S said...

super poem madam

சீனுவாசன்.கு said...

அட இன்னா பாஸ் நீங்க?
நம்ம சைட்டுக்கு வாங்க!
கருத்து சொல்லுங்க!!
நல்லா பழகுவோம்!!!