Sunday, October 9, 2011

மறைந்திருக்கும் அருள்

மறைந்திருக்கும் பொருள்
மறைந்திருக்கும் அருள்

கோவிலில் அர்ச்சனை சடங்கு
ஒருவர்க்கு இருவர்க்கு அல்ல

கோவிலுக்குள் எழும்பும் ஒலி
அனைத்து உயிர்கள் அமைதி பெற வேண்டுகோள்

கூடிய மக்கள் வாழ்த்தியபடி அமர்ந்திருக்க
வாடிய மக்களும் வல்லமை பெறவிருக்க

பிறவி நோயாளியும் நோயைப் பிரித்தெடுக்க
குடும்பம் பிரிந்துடைக்கப் பட்ட துயர் துடைக்கப் பட

மக்கள் மாறிக் கொண்டிருக்க,
சூழ்நிலை மாறிக் கொண்டிருக்க
மாறாதது

மறைந்திருக்கும் பொருள்
மறைந்திருக்கும் அருள்

No comments: