Friday, December 24, 2010

தளர்ச்சியா ?

மௌனமாய் இருப்பாயானால்
குறைத்துக் கொள்ளாதே உன்னை

தளர்ச்சி வந்த நேரம் கூட
உன்னை குறைத்துக் கொள்ளாதே

உனக்குள் உள்ள மௌனம்
ஆழமான சிந்தனைக்காரனாகத்
தூக்கி விடும் பல சமயம்

வருவது எதுவாய் இருந்தாலும்
அதை அவ்வப்படியே வேடிக்கை போல
மனதுள் செலுத்து

எவ்வித முடிவும் கணிக்கத் தேவையில்லை
இவ்வுலகம் நம்மைக் கேட்டு நகர்வதில்லை

மூளையின் பலம் உலகளவு
அங்கீகரித்தால்

உன்னை நம்புவதற்கும்
கடவுளை நம்புவதற்கும்
வித்தியாசம் இல்லை

1 comment:

தமிழ்க்காதலன் said...

நம்பிக்கை தருகிறீர்கள் நல்ல எழுத்துக்களில். பாராட்டுக்கள்.

# உன்னை நம்புவதற்கும்
கடவுளை நம்புவதற்கும்
வித்தியாசம் இல்லை

இது உண்மை. ஒரு ஆழம் தொடாத வரை இது புரியாது. தொட்டிருக்கிறீர்கள் என்பது என் தெளிவு. தீக்குச்சியில் எரியும் பெருங்காடு. காத்திருக்கிறேன்.