Monday, December 20, 2010

என்னுடைய வைரத்தைப் பற்றி

அவன் எனக்கு வைரம்
கொட்டிக் கிடக்கும்
வைரக் கிடங்கு

என்னைத் தாலாட்ட வந்த
தாலாட்டுத் தலைவன்
கண்ணின் இமையாய்
காவல் காக்கும் காவலன்

அவன் வீடு என்
தங்க மாளிகை
அவனுடைய குரல்
என்னைக் கவர்ந்து இழுக்கும்
குழல்

அவனுடைய தேகம்
நான் விரும்பி
விளையாடும் மைதானம்

எனினும் அவன் மனம்
எனக்கு மட்டும் தான்
என்று நான் அடம்
பிடிக்க வில்லை

பணிவிடை செய்ய
மனமிருந்தும்
செயலில் இல்லை

காதலும் பக்தியும் இருந்தால்
அதுவே போதும்
என்பது என் கருத்து
அவன் கருத்தும் கூட

2 comments:

Unknown said...

//பணிவிடை செய்ய
மனமிருந்தும்
செயலில் இல்லை//

arasan said...

அருமை ..