Sunday, December 19, 2010

யானை சொன்னது

கோவில் யானை
தும்பிக்கை
தலையில் வைத்தது

என்ன சொல்லி வைத்தது
புரிந்திருக்கவில்லை
அன்று எனக்கு

உன்னைத் தடுத்து
விளையாடுகிறேன்
பாரு

ஆனாலும் கவனித்துக்
கொள்வேன் அன்போடு
என்று தான் சொன்னதோ

யானையும் கடவுள்
அன்றோ?

No comments: