Sunday, December 12, 2010

விலங்கும் தோழனே

சல் சல் என்ற மணியின் சத்தம் இசை பாட
குதிரை தன வாலை நம் மீது தடவி விட

வண்டி குலுங்கி குலுங்கி ஆட்டம் போட,
ஒருவர் இறங்கினால் தடம் புரண்டது போல் தோண

போர் அடித்தால் நிலைக் கண்ணாடியோடு விளையாட
சவுக்கடிக்காக குதிரைக்காக மனம் உருக

குதிரை வண்டிக்கென்ற தனி மணத்துடன்
இயற்கையின் அதிசயத்தைக் கண்டு களித்த

நாட்கள் அன்று. இந்த நாட்கள் அன்று போல்
எளிமையாக இல்லையே

பழமையும் பெருமையே
விலங்கும் தோழனே

No comments: