Tuesday, December 21, 2010

உடலே என்னைக் கவனி

காதலே
என் மனதில்
மட்டும் அல்லாது
உடலையும்
தொட்டுத் தாலாட்டி
விட்டுச் செல்

உடலே மனமாகிய
என் வீட்டுக்குள்
குடிபுக
உனக்கு இன்னும்
மனம் வர வில்லை
ஏன்?

உடலே
உன்னை நேசிக்க
மறந்ததற்கு
என்னை
மன்னித்து
விடு

என்னை விட்டு
தூரமாகவே
நின்று கொண்டு
இருக்கிறாய் ஏன்?

இன்றோடு
என் மீதுள்ள
பகையைத்
தொலைத்து விடு

மனதோடு
மனமாய்
கலந்து விடு

2 comments:

arasan said...

அசத்துங்க ... அற்புதமா இருக்குங்க

Unknown said...

//உடலே
உன்னை நேசிக்க
மறந்ததற்கு
என்னை
மன்னித்து
விடு
//