Tuesday, December 28, 2010

சுவாமி மலை

சுவாமி மலை எங்கள் சுவாமி மலை
பெற்றோருடன் சென்று களித்த
சுவாமி மலை

ஞானத்தை நாற்பது வயதிலே
அள்ளித் தந்த
சுவாமி மலை

சுவாமி மலை எங்கள் சுவாமி மலை
பெற்றோருடன் சென்று களித்த
சுவாமி மலை

அம்மை அப்பனை
யாரெனக் காட்டிக் கொடுத்த
சுவாமி மலை

சுவாமி மலை எங்கள் சுவாமி மலை
பெற்றோருடன் சென்று களித்த
சுவாமி மலை

அத்வைதம் பிடிக்க வைத்த
சுவாமி மலை

சுவாமி மலை எங்கள் சுவாமி மலை
பெற்றோருடன் சென்று களித்த
சுவாமி மலை

அருள் பரவி இருக்கும் இடம் எங்கும்
சுவாமி மலை
நான் இருக்கும் இடம்
சுவாமி மலை

சுவாமி மலை முருகா
உனக்கு என் வந்தனம்

2 comments:

தமிழ்க்காதலன் said...

மனித தரிசனமே கிடைக்காத காலத்தில் முருக தரிசனம். ம்ம்ம்ம்ம்ம் உங்களின் கண்கள் குடுத்து வைத்தவைதான்.... அவனைப் பார்த்திருந்தால்..... உங்கள் காதுகள் பேருபெற்றவைதான்.... அவன் குரல் கேட்டிருந்தால்....

அவனுக்கு ஒரு விண்ணப்பம்...

இவனுக்கு .....?

Meena said...

எனக்கு ஒரு சந்தேகம். மனத்தை அதிகமாக கசக்கியவர்கள்தான்
கடவுளை மிக அருகில் உணர்கின்றனரோ?