Monday, December 20, 2010

அனைத்து மணமும் ஒன்றே

தூய அன்பிற்கு
பிரிவு இல்லை
ஆழ்ந்த அன்புடன்
மௌனமாக நேசித்த
பழைய நண்பர்கள்
காணாமல் காண்கிறேன்

இன்றைய நாளில் வேறொருவரின்
ஒத்த குரலில் நண்பரின் குரல்
கேட்கிறேன்

இன்றைய நாளில் வேறொருவரின்
உருவத்தில் கூட
நண்பரைக் காண்பதில்
தடங்கல் இல்லை எனக்கு

ஆழமுடன் நேசிக்கத் தெரிந்த
என்னை நானும் ஆழமாக
நேசித்துக் கொள்கிறேன்

ஆழமுடன் நேசித்தால் கேடு ஒன்று
உண்டல்லவா? நேசிக்கப்பட்டவர்
உலகிலிருந்து பிரிந்து சென்றால்
மனம் பித்தாக மாறி விடுமோ?
கண்ணாடி போல உடையும்
மனத்தையும் படைத்து விட்டானே
ஆண்டவன்

நான் அந்நாட்களில்
நெல் வேகும் கணம்
உள்ளிழுத்த மணம்
நேசிக்கிறேன்

இன்று குடிக்கும் காப்பியின்
மணத்தில் கூட நெல் மணத்தைக்
காண்கிறேன்

நான் அந்நாட்களில்
கேட்டத் தவளை
சத்தத்தை இந்நாளில்
மின் சாதனம் எழுப்பும்
தொடர் ஒலியில் கேட்கிறேன்

ஆழமாக சிந்தித்துப் பார்த்தால்
அனைத்து மணமும் ஒன்றே

ஆழமாக சிந்தித்துப் பார்த்தால்
அனைத்து ஒலியும் ஒன்றே
அனைத்து ஒளியும் ஒன்றே

இவற்றை தியானத்தில் புரிந்து
கொண்டேன்.
என்னைப் பித்தன் என்றேனும்
சொல்லிக்கொள்.
பித்தம் தெளிந்த நான்
இனி எதற்கும் வருந்த மாட்டேன்

No comments: