Thursday, December 23, 2010

மயிலே நீயும் நானும்

மயிலே நீ என்னைத் தேடி வந்தாய்
என் வீட்டுக்கு அன்று

நீ விரித்த தோகை கண்டு
ஒரு கணம் சிலிர்த்து விட்டு
நானும் வீட்டிற்குள் விரைந்து விட்டேன்

அம்மா சொன்னார் மயில் வரும் என்று
தெரிந்தும் தினம் நான் சென்றிடவில்லை
வாசல் பக்கம்

உன்னைக் காண நான் வாசல் வரவில்லை
கோபித்துக் கொண்டாய் அன்று

அதற்காகவே என் வீட்டுப் பக்கம்
தலை காட்டாமல் இருக்கின்றாய் இன்று.

மயிலே நீயும் என் உறவினன் சொல்வாயா
உலகுக்கு இன்று

No comments: