Tuesday, December 28, 2010

உயிரைப் பறித்த பின்பு

பத்து மாதம் சுமந்து
பல சவால்களுடன்
பிரசவித்து

பச்சைக் குழந்தைக்குப் பாலூட்டி
பல சௌகரியங்களை பணயமாக்கி

பாலும் பழமும்
நாளுக்குப் பல முறை
நாவிற் சுவைக்க வைத்து

பாலகனை வளர்த்தெடுத்து
கட்டிய அந்தக் கூட்டில்
வினையும் விதியும் ஒன்றாகி
பாலகன் இறைவனிடம்
செல்கின்றான்

பெற்றவளோ
கூட்டை கலைத்திட்டாய்
எனக் கேட்டு உருகுகிறாள்
என் உயிரைப் பறித்த பின்பும்
எதற்காக எதனையும்
கொண்டாட வேணும்
மைந்தனின் குரலும் இல்லை
கும்மாளமும் இல்லை
எனக்கு இனி என் குரல்
வேண்டாம் என மௌனக்குரல்
எழுப்பினாள்

7 comments:

ம.தி.சுதா said...

கவிதைக்கு காதல் அவரிகளை விட அம்மா என்ற ஒரு சொல்லே பெரும் அழகல்லவா... எனக்காக இந்த அம்மா பாடவை கேளுங்கள்..

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
பத்து ஆண்டினுள் பாதித்த பாடல்கள்.

Meena said...

கேட்டேன், நெஞ்சைத் தொட்டது. எல்லோரும் இந்த ராகத்தில் தான் பாடுவோம் என்று நினைக்கிறேன்

ஆனந்தி.. said...

அற்புதம் மீனா...உருகி எழுதி இருக்கீங்க...

தமிழ்க்காதலன் said...
This comment has been removed by the author.
தமிழ்க்காதலன் said...

உள்ளத்தின் ஊமைக் காயங்கள் காலத்தின் கன்னத்தில் அறையும் கைவரிகள்.... வலிக்க வலிக்க படித்து முடிக்கும் முன் கண்ணில் முட்டி நிற்கும் குளம் கண்ணீராய் கொட்டித் தீர்க்க முடியாமல் மதகுடைத்த குளமாய்...
விதியின் முன்னால் எல்லோரும் சருகுகளாய்.... காலமோ கையில் தீவெட்டியுடன்....

arasan said...

உணர்ச்சிமிக்க வரிகள் ....

நல்லா தீட்டி இருக்கீங்க

Meena said...

//உள்ளத்தின் ஊமைக் காயங்கள் காலத்தின் கன்னத்தில் அறையும் கைவரிகள்.... வலிக்க வலிக்க படித்து முடிக்கும் முன் கண்ணில் முட்டி நிற்கும் குளம் கண்ணீராய் கொட்டித் தீர்க்க முடியாமல் மதகுடைத்த குளமாய்...
விதியின் முன்னால் எல்லோரும் சருகுகளாய்.... காலமோ கையில் தீவெட்டியுடன்....//

தமிழ்க் காதலன் அவர்கள்
வருகைக்கும் உங்கள் பொன்னான கருத்துரைக்கும் நன்றி