Saturday, December 18, 2010

நேற்றிரவு

நெஞ்சில் தலை புதைத்து
இதயத் துடிப்பினை எண்ணும்
காதோர விளையாட்டு
கற்றுக் கொடுத்து விட்டாய்

அணைக்கும் வேகத்தில்
காதலை அளக்க முடியாத
எல்லைக்கு ஏற்றி விட்டாய்

விருந்துக்குக்காக காதலா
காதலுக்காக விருந்தா
என்று திகைக்க விட்டாய்

கண் இமைக்கும் நேரத்தில்
காற்றும் நீருமாய்
உருவெடுத்தாய்

காந்தமொன்றை கற்பனையில்
செதுக்கி விட்டாய்

2 comments:

தேவன் மாயம் said...

அழகிய உணர்வுகள்!

பனித்துளி சங்கர் said...

//////அணைக்கும் வேகத்தில்
காதலை அளக்க முடியாத
எல்லைக்கு ஏற்றி விட்டாய்

//////////

வார்த்தை அலங்காரம் ஆழமாய் பதிந்திருக்கிறது கவிதையில் . அருமை . தொடர்ந்து எழுதுங்கள் மீண்டும் வருவேன்