Monday, December 27, 2010

நாடகம்

மன நோயால்

முறைத்து முறைத்து
பார்த்த நாட்களில் மன்னித்து
விடுங்கள் என்னை
பெற்றவர்களே

உரைத்து உரைத்துப்
பேசிய நாட்களில் மன்னித்து
விடுங்கள் என்னை
உடன் பிறந்தவர்களே

விறைத்து விறைத்து
பார்த்த நாட்களில் மன்னித்து
விடுங்கள் என்னை
விருந்தாளிகளே

எரித்து எரித்து
எரிச்சலிட்ட நாட்களில் மன்னித்து
விடுங்கள் என்னை
அன்புத் தோழர்களே

மன நோயென்ற
நாடகத்தை
நடத்திய
நடிப்புக்காக

மனதில் பரிகாரம்
தேடும் என்னை

6 comments:

தினேஷ்குமார் said...

மனமே ஒரு நோயானால் மனமுவந்து மன்னிக்க யவரிருக்கார் நம்மினிலே

தினேஷ்குமார் said...

தங்கள் பதிவுகளை இன்ட்லி , தமிழ்மணத்தில் இணைக்கலாம் அல்லவா தோழி

Meena said...

நீங்கள் மனம் குழம்பிய
நோயாளிக்கு மன்னிப்பு
அளிக்க மாட்டேன் என்கிறீர்களா?

Meena said...

//தங்கள் பதிவுகளை இன்ட்லி , தமிழ்மணத்தில் இணைக்கலாம் அல்லவா தோழி//

இணைத்து இருக்கிறேன் நன்றி

Meena said...

//மனமே ஒரு நோயானால் மனமுவந்து மன்னிக்க யவரிருக்கார் நம்மினிலே//

பண்பை விட்டுக் கொடுக்காத மன நோய் தான்

நான் என்னை மன்னித்து விட்டேன் முதலில்

arasan said...

அருமையான சிந்தனை மிக்க வரிகள் ..