Tuesday, December 21, 2010

வளர்ந்த குழந்தை

என்ன செய்கிறோம்
என்று அறியாமலே
அழும்
பச்சைக் குழந்தைக்கும்

அன்பைத்
தொலைத்து விட்டு
அழும்
வளர்ந்தக் குழந்தைக்கும்

அதிக வித்தியாசம் இல்லை

என்ன செய்கிறோம்
என்று அறியாமலே
சிரிக்கும்
பச்சைக் குழந்தைக்கும்

வருவதை எதிர்கொண்டு
சிரிக்கும்
வளர்ந்த குழந்தைக்கும்

அதிக வித்தியாசம் இல்லை

சொல்லப் போனால் நாம்
அனைவரும் சாகும் வரை
வளர்ந்த குழந்தை தான்

இதில் அத்வைதம்
தெரிகிறதோ
உங்களுக்கு?

No comments: