Wednesday, December 29, 2010

பாலைவனமும் சோலைவனமும்

நமக்கு அநியாயம் செய்கின்ற
நண்பனை, உடன் பிறந்தோனை,
மற்றும் அயலானை
அறிந்து கொள்
பாசம் வைத்திருக்கும்
உயிர் நம் மீது அடிமனதில்

உண்மை புரியும்
காலம் கடந்த பின்
இத்தகைய மனிதரை
மீண்டும் நட்பு செய்யத்
துவங்கும் போது

உண்மையை அறிந்து
கொண்டால்
காலம் கடப்பதற்கு முன்னே
சாந்தமும்
உன்னை காந்தமெனக்
கட்டிக் கொள்ளும்

அன்பு வைக்க யாரும் இல்லை
நம்மீது
நினைக்கும் போது விரக்தி
என்ற விஷயம் தாக்குகின்றது
நாகப் பாம்பின் விஷம் போல

சிலரின் அநியாயக் குறைகளினால்
குறைகளே அதிகம் வாழ்வில்
என்று குமைத்து வாழும் சிலர்
பாலைவனமும் சோலைவனமாகும்
பகைவனையும் நேசிப்பதாலே
அறிந்திலரோ இவர்?

No comments: