Monday, December 20, 2010

கவியின் மறு பக்கம்

ஆழ்ந்த சிந்தனை
புரியாத கவி
எழுதி

கவி எழுதுகிற
சாக்கில்
கடமையைத்
தவற விடாது

கனவில் வாழ்ந்து
காரியமும் செய்து

நல்லவருக்குத் துணையாய்
நலிந்தோர்க்கு ஆதரவாய்

வாழும் அந்த சிறந்த கவி

பல் வரிசை தெரிந்திட
சிரித்து நாணி கோணி
நகைப்பூட்டி சில சமயம்
கோமாளித் தனம் கூட
செய்து நாளொன்றை
உற்சாகமாக நகர்த்துவான்

1 comment:

Unknown said...

//பல் வரிசை தெரிந்திட
சிரித்து நாணி கோணி
நகைப்பூட்டி சில சமயம்
கோமாளித் தனம் கூட
செய்து நாளொன்றை
உற்சாகமாக நகர்த்துவான் //
nice lines