Thursday, December 23, 2010

பணிவிடை செய்வோம்

காலம் காலமாக
பணிவிடை செய்வதோடு
தங்களை
சங்கிலியிட்டுக் கொண்ட
பல்லாயிரம் தமிழ்ப் பெண்கள்

காலப் போக்கில்
தன்னையே
தொலைத்து விட்ட நான்
பணிவிடைத தொலைத்ததும்
ஆச்சரியமில்லையே

ஆசிரியராகப் போவதே
பெண்களுக்குச்
சாலச் சிறந்தது
சொன்ன தந்தை
பணிவிடைக்கு கேடு வரும் என்று
அறிந்திருந்தாரோ அன்று

இறைவா
பணிவிடையில் பெறும் இன்பம்
செய்தவருக்கே அதிகம் என்றுணர்ந்தேன்
இன்று தொடங்கிய சின்னச் சின்னப் பணிவிடையில்

போகின்ற போக்கில் பணிவிடை என்ற
சொல்லுக்கு அர்த்தம் தெரியாமல் போகின்
அதற்கு நீயே பொறுப்பு

No comments: