Tuesday, December 28, 2010

புனித புத்தாண்டு

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
மந்திரம் சொன்ன தந்தையின் அருளை
மற்ற நல்லவர் சொல்லில் காணக்
கற்றுக் கொடுத்த கதிர்காமத்துறை
கதிர்வேல் முருகா உன்னைக்
கணக்காய் பாடிட காலையில்
எழுப்பு கோழி கூவும் முன்னே

கந்தர் சஷ்டி கவசமதை வருகின்ற
புத்தாண்டில் புலன்களோடு ஒன்றாய்
புகுத்தி விடு

புகுந்த கவசமதை புனிதமாகப்
புரிந்து கொள்ள புதிதாய்
எனக்குள் புதுமை புகட்டு

புரியாத விஷயம் தனை
புரிய வைத்து உன்
புகழ் காக்க
புனிதப் பயணம்
புறப்பட
புதிதாய் என்னை ஆயத்தமாக்கு

புனித புத்தாண்டாய்
அமைந்திடவே புதிதாய்
என்னை வாழ்த்திடு

உன் பாதம்
தாள் பணிந்தேன்
புனித புத்தாண்டில்

2 comments:

தமிழ்க்காதலன் said...

வேதனையாய் சிரிக்க முடியாமல் சிரிக்க மட்டுமே முடிகிறது.... உங்களை இறை காத்தருளட்டும். மனப்பூர்வமாய் பிரார்த்திக்கிறேன்.

Meena said...

நன்றி தமிழ்க் காதலன் அவர்களே