Friday, December 31, 2010

ஆற்றாமை

என்ன திமிர் உனக்கு
மகளைப் பார்த்து சொல்லுகின்ற தந்தை

திமிர் என்பது பல சமயம்
தவறாக புரிந்து கொள்ளப் படுவதும்

இன்றைய குழந்தைகள் திமிராகப்
பேசுவது போல் தோன்றும் மாயையும்

ஆற்றாமையாலும் பரபரப்பினாலும்
நடத்தை திமிராகத் தோற்றமளிப்பதும்

கண்ணுக்கு புலப்படாத கண்ணுக்கு
புலப்படவேண்டிய விஷயமாயிற்றே இன்று

No comments: