Sunday, December 26, 2010

உன்னாலும் முடியும்

இனிப்பிருந்தும் எடுத்துக் கொள்ளாத
மௌன ரிஷி போல் வாழ்ந்து வந்த
நான் கற்றுக் கொண்ட தத்துவங்கள்

பருவ வயதின் இன்பங்கள் எத்தனை
இருந்தும் குழந்தை பருவத்து நாட்கள்
விசேஷமாகத் தெரியும் கோலம் என்ன

கண்ணுக்கு அழகாய் கவர்ந்திழுக்க சகலமும் இருக்க
கடந்து சென்ற கணங்களை திரும்பிப் பார்க்கும்
நினைவுகள் விசேஷமாகத் தெரியும் கோலம் என்ன

மனம், எல்லாம் மனம் அது விசேடமானது,
விநோதமானது விவரமானது விசாலமானது
வீம்பும் அதற்குத் தெரியும்
விந்தையும் அதற்குத் தெரியும்

உன்னுடைய பொழுதில் பாதி மற்றவரை
இன்பப் படுத்துவதில் வைத்துக் கொள்
மீதம் பாதியை உன்னை இன்பப் படுத்த
வைத்துக் கொள் இனிமையான வாழ்வைக்
காண்பாய் என்றேத் தோணுகிறது

முதலில் அம்மாவின் அன்பை
முழுமையாக புரிந்து கொள்
அம்மாவின் அன்பை அருகில்
உள்ளவனிடம் காணக் கற்றுக் கொள்
அம்மாவின் கருணையை
உன் குழந்தையிடமிருந்தும் நீ பெற்றுக் கொள்
நான் ஒரு சராசரி மனுஷி என்னால்
இது முடியும் என்றால்
உன்னாலும் முடியும்

காக்கை சிறகினிலே நந்தலாலா
உன்னைக் காணும் இன்பம் தோணுதடி
நந்தலாலா

காக்கை சிறகினிலே நந்தலாலா
வேண்டியவர் தம்மை காண
முடியுமடி நந்தலாலா

பார்த்த இடத்தில் எல்லாம்
உன்னைப் போல் பாவை தெரியுதடி
பார்த்த இடத்தில் எல்லாம்
பரந்த உள்ளங்களின் உருவம்
தோணுதய்யா

தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்
அன்பும் அவ்விதமே எவ்விடத்தும் எவரிடத்தும்
உறைந்து கிடக்கும்

அநியாயங்களைப் பற்றி
நினைப்பதை ஸ்பாம் என்று முத்திரையிட்டு
நல்லவையே நினைத்தால் அகிலமும்
உன்னால் பயனடையும்

அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது
அதிலும் கூன் குருடு செவிடு இல்லாமல்
பிறத்தல் அரிது

அரிது அரிது பிழைத்திருக்கும் கணங்கள்
எல்லாம் கை கால் சுகமென்பது
அதிலும் வலிமையான கை கால் என்பது

இப்படியிருக்க உன் அமைதிக்கும்
வலிமைக்கும் தெளிவிற்கும் ஏது பஞ்சம்
எல்லாம் அந்த மனதை கட்டுக்குள்
வைப்பதில் கொஞ்சம்

No comments: