Sunday, December 26, 2010

எதற்கும் ஏங்க வேண்டாம்

கல்யாண வீட்டு ரசத்தையும்
கோவில் பொங்கலையும்
சாப்பாட்டுக் கடையில்
கண்டால்

காட்டில் ஆடும் மயிலையும்
கானம் பாடும் குயிலையும்
தொலைக்காட்சியில்
கண்டு களித்தால்

கம்மாய்த் தண்ணீரையும்
கடல் நீரையும்
நீச்சல் குளத்தில்
கண்டு களித்தால்

ஆட்டுக் குட்டியின் அழகையும்
ஆட்டின் மிருதுவான தோலையும்
மனிதக் குழந்தையிடம்
கண்டு கொண்டால்

பழனி கோயிலையும்
பழனியில் பலர் இழுக்கும் தேரையும்
பக்கத்து ஊர் கோவிலில்
கண்டு உணர்ந்தால்

பலர் விரும்பும் திருவிழாவையும்
பலர் ரசிக்கும் கலை விழாவையும்
நாளும் பள்ளிக் கூட அறையில்
கண்டால்

எதற்கும் ஏங்க வேண்டாம் இனி உலகில்
எதற்கும் ஏங்க வேண்டாம் இனி உலகில்

1 comment:

arasan said...

உண்மைதான் ... தொடரட்டும் உங்கள் பயணம்