Friday, December 24, 2010

கூட்டு இதயம்

உன் கண்
காந்தமெனக் கவர்ந்திழுப்பது
என் கண்ணை மட்டுமல்ல
முழுவதுமாக என்னை

வாய் தான் பாட்டுக்கு
ஏதோ பேசியிருக்க
கண்ணும் கூடவே
கணக்காய்ப் பேசுதே

கண் எத்தனை எத்தனை
வடிவம் எடுக்குது
நிமிடத்தில் உள்ள
ஒவ்வொரு வினாடியும்

பாவையர் கண்ணிற்கும்
வாலிபர் கண்ணிற்கும்
வித்தியாசம் இருக்க
கண் விழி கலந்த படி
பேசும் மொழி ஒன்று
காதல் மொழி

பேசும் தளம் இரண்டு
என்று எவன் சொன்னது
பேசும் தளமும் இரு இதயம் அல்ல
ஒன்றாய்க் கலந்த ஒரு கூட்டு இதயம்
அடித்துச் சொல்வேன்

1 comment:

தமிழ்க்காதலன் said...

இயற்கையின் இரகசியம் கசியும் கவிதை. மூலங்களை தொட்டு மூளையை தழுவும் இதம். கண்களின் மொழியில் உலகம் ஒரு தூசு.