Friday, December 24, 2010

திருமணம் என்ற பந்தம்

திருமணம் என்ற பந்தத்தில்
தெரிந்து கொண்டது முற்களும்
கற்களும் மட்டுமல்ல
பூக்களும் பழங்களும் கூட

அறிவு பூர்வமாக மட்டுமே
சிந்திப்பது குடும்ப நன்மைக்கு
ஆபத்தாகவே முடியும் என்பதும்

விஷயங்களை அன்பின் அடிப்படையிலும்
மனித உறவின் அடிப்படையிலும்
கையாள வேண்டும் என்பதும்

குடும்பத்தினரிடம் உள்ள நல்ல அம்சங்களை
மட்டுமே மனத்தால் காண வேண்டுமென்பதும்

கல கல வென்று சிரிப்பொலி கேட்க வேண்டிய இடத்தில்
கவலையும் கோபமும் மிகுந்தால் உலகின் மீதுள்ள
நம் பார்வையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதும்

பல பத்து வருடங்கள் சென்ற பின் வரும் ஞானோதயம்
சில பத்து மாதங்களில் வராதிருக்க காரணம்
எது என்று நீங்களே யோசித்துப் பாருங்கள்

3 comments:

Philosophy Prabhakaran said...

கவிதைகள் நன்றாக இருக்கிறது.... வாழ்க்கை தத்துவத்தை உணர்த்துகிறது...

Meena said...

உங்களைப் போன்று ஆதரவும் ஊக்கமும் அளித்தால்
நான் கவிதைகளைத் தொடருவதில் தடங்கல் இருக்காது
நன்றி

பனித்துளி சங்கர் said...

வாழ்க்கை உணர்ந்து எழுதிய வரிகள் கவிதை சிறப்பு . பகிர்வுக்கு நன்றி