Saturday, December 25, 2010

பகைவனின் பூ மனம்

கோபித்துக் கொண்டு என்ன சார் கண்டோம்
பூ போன்ற நம் மனத்தை நாமே கசக்குகிறோமோ

ஒவ்வொருவனும் அடித்தளத்தில் அடிமனதில்
உயர்ந்தவனே. அவன் சில சமயங்களில் கொடூரமாகக் காட்சி அளிக்கிறான்

நாம் எந்தப் பருவத்தில் இருக்கிறோம் என்பது கூட
முக்கியம் விடலைப் பருவத்தில் அப்பா கூட கொடூரமானவராகத் தெரிந்தார்

அப்பருவம் தவிர மற்றொரு சமயம் அவர் மிகவும்
தங்கமானவராகவேத் தெரிந்தார்

என்னை ஏமாற்றி விட்ட பகைவன் என்று எண்ணி
என்னை நானே ஏமாற்றிய காலமும் உண்டு

மீண்டும் அந்த பகைவரில்லா பகைவனுடன் பழகும் போது
அவனும் தங்க மனமுடையவன் என்பதை அறிந்தாயிற்று

ஆக நம் மனம் எப்படி பார்க்கின்றது என்பது தான்
நம்மை ஆட்டி வைக்கிறது

நீங்கள் எல்லோரும் என் குழந்தைகள் அல்லவா?
அதனால் நான் உங்களுக்கு அன்புடன் கூறுவது
பகையின் காரணம் அடுத்தவரிடம் அல்ல
நம்மிடத்தே நம்மிடத்தே மட்டும்
உன்னை அவமதித்தவனையும்
உயர்ந்தவன் என்றே எண்ணிக்கொள்
முயன்றால் முடியும் இங்ஙனம்
நீயும் ஒரு பூ மனதுக் காரன் அன்றோ?

முடியவில்லை என்றால் சிறிது
தியானம் பண்ணிக்கோ. உன்னுடைய
பூ மனதை
நீயே அறிஞ்சுக்கோ

2 comments:

Mohan said...

படித்தேன்! ரசித்தேன்! வியந்தேன்!

Meena said...

மோகன்,
உன்னுடைய கருத்துரைக்கு நன்றி.
கவிதை பிடித்திருந்தது குறித்து மகிழ்ச்சி