Tuesday, December 28, 2010

என் மீது குதித்து விட்டாயே

என்னிடம் பிடித்தது என்ன உனக்கு
தவளை கேட்டது

குதிக்கும் பாணி உன்னுடையது
இனம் தெரியாத மகிழ்ச்சியும்
வியப்பும் என்னுடையது

என்னை உன் மனதில் நிறைத்தது என்ன
அடுத்து தவளை கேட்டது

தூங்கிப் போக இன்னும் ஒரு நிமிடமே இருக்க
இயற்கையை ஒலிபரப்பும் உன் சத்தம்
தாலாட்டி தூங்க வைத்தது என்னை

தினமும் என்னை வந்து
என் வீட்டில் பார்க்கின்றாயே
அது எதற்கு தவளை கேட்டது

உன்னிடம் உள்ள ஈர்ப்பு எனக்கு என்
அன்னையிடத்துக் கூட இல்லையே அதனால்

உன் வீட்டிற்கு நான் வந்த போது
அலறி விட்டாயே அது ஏன் கேட்டது தவளை

நீ ரொம்ப மோசம் அனுமதி இல்லாமல்
என் மீது குதித்து விட்டாயே?

நீ மட்டும் என்ன அனுமதி இன்றி
எனக்கு மிக அருகில் கல் எடுத்து வீசி
என்னைத் திகிலடைய செய்து விட்டாயே

நம்ம ரெண்டு பேரும் நண்பர்கள்
இதெல்லாம் சகஜம் என்றே நினைக்கத்
தோணுகிறது. நான் வளர்ந்ததும்
என்னை வந்து பார்ப்பாயா?

4 comments:

சென்னை பித்தன் said...

அபூர்வ நட்பு!
நல்ல கவிதை!

keerthanav@gmail.com said...

நன்றாக இருக்கின்றது சகோதரி

ம.தி.சுதா said...

நல்லதொரு நட்பு....

தமிழ்க்காதலன் said...

மொழிப் பேசும் தவளை அழகுதான். தவளை பேசும் மொழியும் அழகுதான். அட தவளையின் மொழி தமிழ்தான் என்கிற உங்கள் கண்டுபிடிப்பு சிலிர்க்க வைக்கிறது. மென்மையாய் ஒரு அன்பின் இழையோட்டம்........ காலை கதிரொளியாய்...