Sunday, December 26, 2010

நாற்பதின் விவேகம்

ஒரு படி சோகம்
ஒரு படி மகிழ்ச்சி

கடந்தது ரெண்டு வருடம்

ரெண்டு படி சோகம்
ரெண்டு படி மகிழ்ச்சி

கடந்தது நாலு வருடம்

நாலு படி சோகம்
நாலு படி மகிழ்ச்சி

கடந்தது எட்டு வருடம்

ஐந்து படி சோகம்
ஐந்து படி மகிழ்ச்சி

கடந்தது பத்து வருடம்

வருடங்கள் கடந்தது
பருவங்கள் கடந்தது
பெண்ணுக்கு பருவம் நாற்பது

பன்னிரண்டு படி சோகமும்
பன்னிரண்டு படி மகிழ்ச்சியும்
இருபத்திநாலும் மகிழ்ச்சி ஆயிற்றே
அது என்ன மாயம்
நாற்பதின் விவேகம்

4 comments:

Learn said...

அருமையான சிந்தனை தொடரட்டும் உங்கள் கவி

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in

arasan said...

அசத்தல் மேடம்

Meena said...

நன்றி அரசன் அவர்களே உங்கள் தொடர் கருத்துரைகளுக்கும்
ஊக்குவிப்பிற்கும்

keerthanav@gmail.com said...

அருமை சகோதரி