Thursday, December 16, 2010

கலங்காத உயிர்

ஆரம்பப் பள்ளிக்கான சைக்கிள் சவாரி
பின்னர் அடுத்தடுத்து வந்த வருடங்களில்

பள்ளம் தாண்டி தாண்டி
பள்ளிக்கு விரைந்த
அனுபவம்

விவீட்பாரதியில் எஸ் பீ பீ பாடல்கள்
தேன் போல் காதில் ஒலிக்க
பள்ளிக்கு பறந்த
அனுபவம்

சேற்றிலே வழுக்காமல் கால்களை முன்னேற்றி
கலங்காமல் பள்ளிக்குச் சென்ற தைரியம்

முழங்கால் அளவு தண்ணீருக்குள்ளும்
தயங்காமல் வழி தடத்தைக் கண்டு கொண்ட சாதுரியம்

பரீட்சை நாள் காலை தேசப் படம் ஒன்றை
கடையிலிருந்து காசு கொடுத்து களவாடிக் கொள்ளும் பழக்கம்

வீட்டில் இன்க் இருந்தும் எதற்காகவோ
கடையில் பேனாவிற்கு இன்க் ஊற்றும் பழக்கம்

பள்ளி தொடங்கும் நாட்களில்
பிரில்-இன்க் லேபல்களை
பரவசத்துடன் சேகரித்துக் கொள்ளும் பழக்கம்

மாலையில் வீடு திரும்பும் நேரம்
கறி காய் வாங்கி பழக்கடையிலிருந்து
வரும் பழ வாசத்தை உள்ளிளுத்ததன் நினைவு

பாலம் இருக்க செருப்பை கையிலெடுத்து
ஆலைக் கழிவு ஓடைக்குள் இறங்கி
அக்கறை செல்லும் சேட்டை

அண்ணன் ஒருவன் சைக்கிள் வித்தை செய்து
வீடு திரும்புவதை வேடிக்கை கண்ட நினைவு

இத்தனையும் நான் ஒரு சாதுரியமான சிறுமி
என்றே நினைவுபடுத்துகிறது

சிறுமியாக இருந்தபொழுது கலங்காத உயிர்
இன்று வளர்ந்து ஆளான பின் பல சமயம்
மனம் கலங்கும் மாயமும் என்னவோ?

2 comments:

sslaxman said...

very nice capture of old memories :)
"இளம் கன்று பயம் அறியாது" - உண்மைதான் போல :)

arasan said...

ம்ம்ம்.. அருமையான பகிர்வு .. வாழ்த்துக்கள்...