Monday, December 27, 2010

ஆயிரம் கணவர்கள்

விந்தினால் பெற்றேன்
ஒரு குழந்தை

அன்பினால் பெற்றேன்
கவிக் குழந்தை

ஞானத்தினால் பெற்றேன்
உலக மக்களை குழந்தையென

ஆயிரம் கணவர்கள்
சேர்ந்திங்கு
பரிசளித்தனர்
ஆயிரம்
குழந்தைகள்

நான் கண்ட
விந்தில்லாக் கணவர்கள்

1 comment:

arasan said...

சிந்தனை அருமை... வரிகளும் அருமை