Thursday, December 23, 2010

குயிலே உன் கானம்

பதினாறு வயதில் நான்
விழித்தெழுந்ததும் கேட்ட உன் கானம்
என்னை சிறையெடுத்து விட்டதே குயிலே

இன்று நீ கூவ மாட்டாயா என்ற ஏக்கத்தில்
தோட்டத்தருகில் சென்று தனியாய்
தூங்கிப் பார்த்தேன்

உன் குரல் கேட்டு விழித்தெழுந்தேன்
பின்பு தெரிந்தது கனவில் தான்
உன் குரல் என்று

மீண்டும் வாராயோ சன்னலோரம்
வந்து என்னை விழித்தெளுப்பினால்
நாளும் நீ என் நெஞ்சோரம்

No comments: