Sunday, December 19, 2010

திருந்தி விடு மனமே

சஞ்சலமும் சிரிப்பும்
கோபமும் கும்மாளமும்
கவலையும் களிப்பும்
அழுகையும் ஆனந்தமும்
குழப்பமும் குதூகலமும்
ஒன்றுக்கொன்று விட்டுக்
கொடுத்து நம் வாழ்க்கையை
அலங்கரிக்கின்றன

இது தெரிந்த பின்னும்
ஏன் அழுகிறாய்?
எதற்கு கலங்குகிறாய்?

மகனை இழந்த
தாயே சிறிது காலம்
சென்ற பின்
அமைதியுறும்போது
நீ மட்டும் எதற்காக
சிறியதற்கு எல்லாம்
மனம் சஞ்சலம் அடைகின்றாய்?

திருந்தி விடு
மனமே இன்றோடு
திருந்தாத காரணம்
ஒன்று இருந்தால்
அது உன்னை நீயே
வீழ்த்துவதற்கு
மட்டும் தான்

1 comment:

arasan said...

நிதர்சன உண்மை வரிகள் ...

கவிதை ஜொலிக்குது ... கலக்குங்க