Saturday, December 25, 2010

பெற்றெடுக்கும் பாக்கியம்

பாலூட்டி சீராட்டி வளர்த்த என் அன்னைக்காக
தோளில் சுமந்து, படிக்க வைத்து ஆளாக்கிய தந்தைக்காக
என்னைக் கவியாக மாற்றிக் கொண்டேன் இன்று

நான் துள்ளித் திரிந்ததால் தன மனம் துள்ளப் பெற்ற
தந்தை நான் மன நோயுற்று வாழ்வில் தத்தளிததைக் கண்டு
வருத்தம் பல என்றார்

பெற்றவர் வருத்தம் தீர்ந்திடவே
நான் அவர்கள் வயிற்றில் பாலை வார்த்திட
வேண்டுமென்று கோவிலில் அந்நாளில் வேண்டியதுண்டு

மௌனமாய் வேண்டியப் பலன் இன்று
மீண்டும் மீண்டும் மக்கள் மத்தியிலே
அதனையே வேண்டுகிறேன் இன்று

இறைவா, என் மேல் உனக்கு பாசம்
இருந்தால்
என் பெற்றோர் வயிற்றில்
நான் பால் வார்க்கச் செய்து விடு
என் பெற்றோர் வயிற்றில்
நான் பால் வார்க்கச் செய்து விடு

No comments: