Tuesday, December 28, 2010

உன்னைப் பற்றி

எனை வாழ வைத்த அழகு பூபதி
எனை ஆள வந்த ஆதி
எனைக் கவர வந்த கார்முகிலன்
எனைப் பாட வைத்த பாடலாசிரியர்
எனைப் பறக்க வைத்த வானம்
எனை அமைதிப் படுத்தும் அரு மருந்து
எனைத் தூங்க வைத்த தாலாட்டு
எனைத் தாயாக்கிய தர்மப் பிரபு
என்னுடன் ஆட வந்த ஆடலரசன்
என்னுடன் வாழ வந்த வரதன்

2 comments:

தமிழ்க்காதலன் said...

உணர்வுகளில் வாழும் வாழ்க்கை புலப்படுகிறது. உண்மையில் இல்லை என்கிற ஆதங்கமும் வெளிப்படுகிறது. வாழ்க்கையின் பக்கங்களில் கொஞ்சம் பசுமை கூட்டும் முயற்சி....

Meena said...

பாகற்காயின் சிறு கசப்பும் சிலருக்குப் பிடிக்கும்