Tuesday, December 21, 2010

நாளெல்லாம் திருநாளாம்

காலைப் பனியில்
காரெடுத்துக் கிளம்பினால்
அதுவும் சாலையை ஈக்களாக
கார்கள் மொய்க்கும் முன்

சாலையும் நோக்கி
முன்னிருக்கும் கண்ணாடியில்
நீல வானையும் நோக்கினால்
அதுவும் மேகக் கூட்டம் கலையும் முன்

கூடவே காதுக்கு இதமாக
அழகிய தமிழ் பாட்டொன்று
கேட்டால்
அதுவும் இரைச்சலற்ற அமெரிக்காவில்

நாளெல்லாம் திருநாளாய்த்
துவங்கும்

1 comment:

ரிஷபன்Meena said...

தோட்டத்திற்கு அழகு சிதறிக் கிடக்கும் சருகுகள். நல்ல சாலைக்கு அழகு இரைச்சல்.

ஒவ்வொருத்தருக்கு ஒரு டேஸ்ட்.