Friday, March 26, 2010

குழந்தை மனம்

கள்ளம் கபடமற்ற குழந்தை உள்ளத்தை
உடையோனுக்கு இருக்கும் இடம் கர்ப்பக்கிரகம்

தாய் தந்தையரை சதா நினைக்கும் ஒருவனுக்கு
இருக்கும் இடம் இறைவன் சந்நிதி

மிருகமாகவும் தெய்வமாகவும் இருக்கக் கூடியது நம் மனம்
நம்முள் குழந்தை மனம் உறங்கிக் கொண்டிருக்கிறது

குழந்தை மனத்துடன் பழகி வந்தால்
தெய்வம் என்றும் துணை நிற்கும்

குழந்தை மனத்துடன் பழகி வந்தால்
இருக்கும் இடம் கர்ப்பக் கிரகமாகும்

குழந்தையாகவே என்றும் வாழ்ந்து வந்தால்
தவ சக்தியும் நம்மைத் தேடி வரும்

அழுத குழந்தை உடனே சிரிப்பது போல
கலக்கமடைந்து உடனே அமைதி பெறும்
நம் குழந்தை மனம்

குழந்தைக்கு உண்மையான கவலை கிடையாது
நம் குழந்தை மனத்திற்கும்
உண்மையான கவலை கிடையாது

3 comments:

sathishsangkavi.blogspot.com said...

//அழுத குழந்தை உடனே சிரிப்பது போல
கலக்கமடைந்து உடனே அமைதி பெறும்
நம் குழந்தை மனம் //

நல்லாயிருக்குங்க.....

Dhanalakshmi said...

//குழந்தைக்கு உண்மையான கவலை கிடையாது
நம் குழந்தை மனத்திற்கும்
உண்மையான கவலை கிடையாது//

nice lines...
from
vd3509@gmail.com

Rathnavel Natarajan said...

நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.